முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுத்தேர்வு எழுதும் 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு - கட்டணத்தில் இருந்து விலக்கு தொடக்க கல்வி இயக்குனர் தகவல்

புதன்கிழமை, 22 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தமிழகத்தில் 10,11,12 -ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது போல், 5 மற்றும் 8 -ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் 5 மற்றும் 8 -ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் வேறு பள்ளிகளில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 5-ம் வகுப்புக்கு 1 கிமீ சுற்றளவுக்குள்ளும், 8 -ம் வகுப்புக்கு 3 கிமீ சுற்றளவுக்குள்ளாகவும் தேர்வு மையங்கள் அமைப்பதற்கு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியது. இதற்கும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியது. பின்னர், 5, 8 பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் வேறு பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. அந்தந்த பள்ளிகளிலே தேர்வு எழுதிக் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், 

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுக்கு, அந்தந்த பள்ளிகளிலே தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு பள்ளிகளை தவிர்த்து, தனியார் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 100 ரூபாய் என்றும், 8 -ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 200 ரூபாய் என்றும் கூறப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து