முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் , துணைத் தலைவர்களுக்கான அறிமுக பயிற்சி: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் துவக்கி வைத்தார்:

புதன்கிழமை, 22 ஜனவரி 2020      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் திருமங்கலம்,கள்ளிக்குடி,சேடபட்டி,உசிலம்பட்டி,செல்லம்பட்டி, தே.கல்லுப்பட்டி,திருப்பரங்குன்றம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் பங்கேற்ற ஒரு நாள் அறிமுக பயிற்சி முகாமினை தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம்,கள்ளிக்குடி,சேட்பட்டி,உசிலம்பட்டி, செல்லம்பட்டி,தே.கல்லுப்பட்டி,திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கான ஒருநாள் அறிமுக பயிற்சி முகாம் திருமங்கலம் நகர் விமானநிலைய சாலையில் உள்ள பாலகுரு-கமலாதேவி மஹாலில் சிறப்புடன் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு மதுரை மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரியங்கா முன்னிலை வகித்தார்.மாவட்ட பஞ்சாயத்து உதவி இயக்குநர் செல்லத்துரை வரவேற்றார்.இதையடுத்து மேற்கண்ட 7ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் 232 பேர் மற்றும் துணைத் தலைவர்கள் பங்கேற்ற இந்த அறிமுக பயிற்சி முகாமில் தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு தலைமையேற்று ஊராட்சி மன்ற பெண் தலைவர்கள் குத்துவிளக்கை ஏற்றி வைத்திட முகாமினை துவக்கி வைத்தார்.
 பின்னர் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும்,துணைத் தலைவர்களும் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.இதையடுத்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,முகாமில் பங்கேற்ற ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும்,துணைத் தலைவர்களுக்கும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.இதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர்கள் அனைவருக்கும் பயன் தரக்கூடிய சிறப்பு கையேடுகள் மற்றும் தமிழ்-ஆங்கிலம் அகராதி புத்தகங்களை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். முன்னதாக பயிற்சி முகாமிற்கு வருகை தந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.,கே.தமிழரசன்,திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன்,மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல்,மாவட்ட கழக துணைச் செயலாளர்,மாவட்ட கவுன்சிலர் அய்யப்பன்,மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் திருப்பதி,திருமங்கலம் நகர் கழகச் செயலாளர் ஜே.டி.விஜயன்,ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன்,மகாலிங்கம், முன்னாள் யூனியன் சேர்மன் தமிழழகன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,நகர் அவைத் தலைவர் ஜஹாங்கீர் கட்சி நிர்வாகிகள் லதாஜெகன்,சுகுமார், சிங்கராஜபாண்டியன் மற்றும் மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அதிகாரிகள்,ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து