முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்ட நீதிபதி இடமாற்றம்

வியாழக்கிழமை, 23 ஜனவரி 2020      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்ட நீதிபதி சதீஷ்குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012-ல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த வழக்கில் வினய் சர்மா, அக்‌ஷய் குமார் சிங், முகேஷ் குமார் சிங் மற்றும் பவன் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்ட நீதிபதி சதீஷ்குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் கூடுதல் அமர்வு நீதிபதியாக இருந்த நீதிபதி சதீஷ்குமார் சுப்ரீம் கோர்ட்டில் கூடுதல் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து