முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை பச்சையாறு நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு

வியாழக்கிழமை, 23 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

நெல்லை : நெல்லை மாவட்டம் பச்சையாறு நீர்த்தேக்கத்தில் இருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துதிருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்குப்பச்சையாறு நீர்த்தேக்கத்திலிருந்து, பிசான பருவ சாகுபடிக்கு வரும் 27-ம் தேதி முதல் 31.3.2020 வரை தண்ணீர் திறந்து விட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருநெல்வேலி மாவட்டத்தில் வடக்குப்பச்சையாறு நீர்த்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு 27.1.2020 முதல் 31.3.2020 வரை நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 100 கன அடிக்கு மிகாமல், நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தினைப் பொறுத்து, தேவைக்கேற்ப, தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம்  பத்தை, களக்காடு, வடமலை சமுத்திரம் உள்ளிட்ட 14 கிராமங்களில் உள்ள 9592.91 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு, உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறுஅந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து