முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 24 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

திருமூர்த்தி அணையில் இருந்து வரும் 27-ம் தேதி முதல் நான்கு சுற்றுகளில் மொத்தம் 7600 மி.க.அடிக்கு மிகாமல் பாலாறு உபவடிநில முதலாம் மண்டலப் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட  முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து 2020-ம் ஆண்டு பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு உபவடிநில முதலாம் மண்டலப் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடக் கோரி பாலாறு படுகை பாசனதாரர்கள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து 2020-ம் ஆண்டு பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு உபவடிநில முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடக் கோரியுள்ள பாலாறு படுகை பாசனதாரர்கள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து 27.1.2020 முதல் நான்கு சுற்றுகளில் மொத்தம் 7600 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 94521 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு, உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து