முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரக்ஸிட் ஒப்பந்தத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கையெழுத்து

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜனவரி 2020      உலகம்
Image Unavailable

பிரசல்ஸ் : ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகுவதற்கான பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கையெழுத்து போட்டார்.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகுவதற்கான பிரெக்ஸிட் நடவடிக்கையை அந்த நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிரப்படுத்தி வருகிறார். அந்த வகையில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகுவதற்கான முறையான ஒப்பந்தத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கையெழுத்திட்டார்.

லண்டனில் டவுனிங் வீதியில் அமைந்துள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில், ஐரோப்பிய கூட்டமைப்பு மற்றும் இங்கிலாந்து வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் முன்னிலையில் அவர் கையெழுத்திட்டார். முன்னதாக இந்த ஒப்பந்தத்தை பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில் இருந்து இங்கிலாந்து வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கொண்டு வந்தனர். இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டதை இங்கிலாந்து வரலாற்றில் புதிய அத்தியாயம் என பிரதமர் போரிஸ் ஜான்சன் வர்ணித்தார். இந்த ஒப்பந்தம், மீண்டும் பிரசல்ஸ் எடுத்துச் செல்லப்படுகிறது. ஐரோப்பிய நாடாளுமன்றம் அதற்கு ஒப்புதல் அளிக்கிறது. அதைத் தொடர்ந்து வரும் 31-ம் தேதி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து