எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் நடைபெற்ற தமிழக முதலமைச்சரின் சிறப்புமக்கள் குறை தீர்க்கும் முகாமில் தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ரூ.1.25 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன் இந்திய வரலாற்றில் முதல் முறையாக நாடோடி இனத்தைச் சேர்ந்த குடுகுடுப்பைக்காரர்களுக்கு காட்டு நாயக்கர் இன ஜாதிச்சான்றிதழை நேரில் வழங்கி சிறப்புரையாற்றினார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம் நேற்று வெகு சிறப்புடன் நடைபெற்றது.அதன்படி திருமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற தமிழக முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாமிற்கு மதுரை மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை வகித்தார்.மாவட்ட வருவாய் அலுவலர்(பொ)கண்ணன்,திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் நா.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருமங்கலம் நகர் கழகச் செயலாளர் ஜே.டி.விஜயன் வரவேற்றார்.
ஏழை,எளிய மக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த தமிழக முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாமில் தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழக அரசின் சார்பில் திருமங்கலம் வருவாய் கோட்டத்தைச் சேர்ந்த பயனாளிகள் 500க்கும் மேற்பட்டோருக்கு முதியோர் உதவித் தொகை,வீட்டுமனை பட்டா,பட்டா மாறுதல் உட்பிரிவு,ஆதரவற்ற விதவைச் சான்று,முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை,விபத்து நிவாரணம் உள்ளிட்ட ரூ.1.25கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நேரில் வழங்கி சிறப்புரையாற்றினார்.பின்னர் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் பெற்றுக் கொண்டு அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திடுமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முன்னதாக நலத்திட்ட உதவிகள் வழங்கிட வருகை தந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இதனிடையே நாடு சுதந்திரம் அடைந்தது முதலாக ஜாதிச்சான்றிதழ் கேட்டு நாடோடிகளான காட்டுநாயக்கர் இனத்து குடுகுடுப்பைகாரர்கள் பல தலைமுறைகளாக போராடி வந்தனர்.இதனையறிந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் நா.முருகேசனை இது தொடர்பாக ஆய்வு செய்து குடுகுடுப்பைக்காரர்களுக்கு காட்டுநாயக்கர் இனம் என ஜாதிச்சான்றிதழ் வழங்கிடுமாறு உத்தரவிட்டார்.இதையடுத்து கோட்டாட்சியர் நா.முருகேசன் பல்வேறு கட்ட ஆய்வுகள் மேற்கொண்டு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழிகாட்டுதலின்படி ஜாதிச்சான்றிதழ் வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொண்டார்.இதனை தொடர்ந்து திருமங்கலம் நகரில் நடைபெற்ற தமிழக முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாமில் இந்திய வரலாற்றில் முதல் முறையாக நாடோடிகளாக வலம் வந்திடும் குடுகுடுப்பைக்காரர்கள் 20பேருக்கு முதல்கட்டமாக காட்டுநாயக்கர் இன ஜாதிச்சான்றிதழை தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.இந்திய வரலாற்றில் முதல்முறையாக வழங்கப்பட்ட இந்த ஜாதிச்சான்றிதழை பெற்றுக் கொண்ட குடுகுடுப்பைக்காரர்கள் விழா மேடையில் தமிழக அரசுக்கும்,அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கும் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை குடுகுடுப்பை முழக்கி தெரிவித்துக் கொண்டனர்.
இந்த முகாமில் மாவட்ட கழக துணைச்செயலாளர் அய்யப்பன்,கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல்,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம்,மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் திருப்பதி,ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன்,ராமசாமி,மகாலிங்கம்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,யூனியன் சேர்மன்கள் லதாஜெகன்,மீனாட்சிமகாலிங்கம்,திருமங்கலம் நகர் அவைத்தலைவர் ஜஹாங்கீர்,முன்னாள் துணை சேர்மன் சதீஸ்சண்முகம்,கட்சி நிர்வாகிகள் செல்வம்,ஆண்டிச்சாமி,ஆலம்பட்டி ஜெகன்,சாமிநாதன்,சுகுமார்,சிவன்காளை,சிவகுமார், சிவனாண்டி,ராஜாமணி, அன்னக்கொடி,கொடிவைரன்,வெல்டிங்முருகன்,பழனிசாமி கட்சி வழக்கறிஞர்கள் முத்துராஜா,வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழாவின் நிறைவில் திருமங்கலம் வட்டாட்சியர் தனலட்சுமி நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.