முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாத்மா காந்தி நினைவு தினம்: ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் டெல்லியில் அஞ்சலி

வியாழக்கிழமை, 30 ஜனவரி 2020      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மாவின் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மூத்த தலைவர்கள் அத்வானி, மன்மோகன்சிங், சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர்.

மகாத்மா காந்தி 1948 -ல் படுகொலை செய்யப்பட்ட நினைவுதினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. காந்தியின் தியாகத்தையும் சுதந்திரத்திற்காக உயிர்நீத்தவர்களையும் நினைவுகூரும் விதமாக தியாகிகள் தினமாகவும் அது போற்றப்படுகிறது.

டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் நேற்று காலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தினர். மூத்த பா.ஜ.க. தலைவர் அத்வானி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி ஆகியோரும் காந்திக்கு மலரஞ்சலி செலுத்தினர். அரசியல் தலைவர்களைத் தவிர, பாதுகாப்புத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், ராணுவத் தலைமை ஜெனரல் எம்.எம். நாரவனே, கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங், மற்றும் ஐ.ஏ.எப். தலைமை விமானப்படைத் தலைவர் மார்ஷல் ஆர்.கே.எஸ். படாரியாவும் அஞ்சலி செலுத்தினர்.

தியாகிகள் தினத்தில் மகாத்மா காந்திக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் மரியாதை என்று குறிப்பிட்டு ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

காந்திஜி தனது இறுதி தியாகத்தில், நமக்கு நிலையானதொரு நினைவை விட்டுச் சென்றுள்ளார்: அது நிபந்தனையற்ற அன்பு, குறிப்பாக மற்றவர்களிடத்தில். காந்திஜியின் உண்மையான செய்தியை நாம் கண்டடைவோம் என்று நான் நம்புகிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசத் தந்தை மகாத்மா காந்தியின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி எனக் குறிப்பிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டர் செய்தியில், பாபுவின் ஆளுமை, யோசனைகள் மற்றும் லட்சியங்கள் ஒரு வலுவான, திறமையான மற்றும் வளமான புதிய இந்தியாவைக் கட்டியெழுப்ப தொடர்ந்து நம்மைத் தூண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து