முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து விவகாரங்கள் குறித்தும் பட்ஜெட் தொடரில் விவாதிக்க தயார் - பிரதமர் மோடி திட்டவட்டம்

வியாழக்கிழமை, 30 ஜனவரி 2020      இந்தியா
Image Unavailable

புது டெல்லி  : பொருளாதாரம் மட்டுமின்றி அனைத்து விவகாரங்கள் குறித்தும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது விவாதிக்க தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்க உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் போது பேசிய பிரதமர் மோடி, பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அனைத்து விவகாரங்கள் குறித்தும் வெளிப்படையாக விவாதிக்க அரசு தயாராக உள்ளது என கூறினார். பெரும்பாலான உறுப்பினர்கள் நாட்டின் பொருளாதார சூழல் குறித்து பேச வேண்டும் என கேட்டுள்ளனர். இதனை நான் வரவேற்கிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்.

பொருளாதார பிரச்னைகள் குறித்த விவாதங்களும், உங்களின் ஆலோசனைகளும் நிச்சயம் தேவை என தெரிவித்த அவர், இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது உலக நாடுகளின் கவனத்தை எவ்வாறு இந்தியாவிற்கு சாதகமாக திருப்புவது என்பதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம் என்றும் தெரிவித்தார். புத்தாண்டு துவங்கி இருக்கும் இந்த நேரத்தில் நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதையில் இட்டுச் சென்றால், அது நாட்டு நலனுக்கு சிறந்ததாக அமையும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து