முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் எடப்பாடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 18 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடக்கிறது.

சேலம் மாவட்டம் தலைவாசலில் கடந்த 9-ம் தேதி நடந்த கால்நடை பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டெல்டா மாவட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்றார். இது தொடர்பாக விரைவில் சட்டம் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

தமிழக சட்டசபையில் தற்போது பட்ஜெட் கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடர் வரும் 20-ம் தேதியோடு நிறைவடைகிறது. தற்போது நடந்துவரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் தொடர்பான சட்டத்தை கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு வேளாண்மை மண்டலம் தொடர்பான சட்ட மசோதா 20-ம் தேதி சட்டமன்றத்தில் வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 19-ம் தேதி (இன்று) மாலை 4 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடுகிறது. இதில் டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அது தொடர்பான சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என தெரிகிறது. இதுதவிர, குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்கள், தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பாக முஸ்லிம் மக்கள் விடுத்துள்ள கோரிக்கைகள் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து