முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா வைரசுக்கு ஜப்பான் கப்பலில் பயணிகள் 2 பேர் பலி

வியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2020      உலகம்
Image Unavailable

ஜப்பான் துறைமுகத்தில் உள்ள டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்த 2 பயணிகள் கொரோனா வைரசுக்கு பலியாகியுள்ளனர்.

ஹாங்காங்கில் இருந்து ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்துக்கு வந்த டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில் பலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கப்பலில் இருந்த 3700-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கு படிப்படியாக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டன. இதில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கப்பலில் இருந்து கீழே இறக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். கப்பலில் உள்ள அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டது. இதில் 624 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சீன அரசு தெரிவித்தது. இந்த நிலையில் கப்பலில் பயணிகள் 2 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர். 80 வயது உடைய ஆண் மற்றும் பெண் இருவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையே சொகுசு கப்பலில் கொரோனா தொற்று இல்லாத பயணிகள் வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் 443 பேர் கப்பலில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டனர். நேற்று மேலும் பயணிகள் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டனர். கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத பயணிகளை கப்பலில் இருந்து வெளியேற்றும் பணி முடிய 3 நாட்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து