முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு நீண்ட காலம் நீடிக்க வேண்டும் - நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

திங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2020      இந்தியா
Image Unavailable

அகமதாபாத் : இந்தியா -அமெரிக்கா இடையேயான உறவு நீண்ட காலம் நீடிக்க வேண்டும் என்று நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.

அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் மைதானம் சென்ற அதிபர் டிரம்பிறகு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அத்துடன் மொதேரா மைதானத்தின் நுழைவு வாயிலில் அதிபர் டிரம்பிற்கு ஒட்டகப் படை வரவேற்பும்  அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி நடந்தது. அரங்க மேடையில் அமெரிக்க அதிபர் டிரம்பும், பிரதமர் மோடியும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இருநாட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதும் நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர் தனது உரையை தொடங்கும் முன் நமஸ்தே டிரம்ப், டிரம்ப் நீடுழி வாழ்க என முழக்கமிட்டார் பிரதமர் மோடி. அதை தொடர்ந்து அரங்கில் கூடியுள்ள மக்களும் நமஸ்தே டிரம்ப், டிரம்ப் நீடுழி வாழ்க என முழக்கமிட்டனர். நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது,

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்,  அவரது மனைவி மற்றும் மகளை  மனதார வரவேற்கிறேன். அமெரிக்க அதிபரின் பயணம் வரலாற்று சிறப்புமிக்கது. இந்திய, அமெரிக்க உறவு சாதாரண உறவல்ல, ஆழமான நட்புறவு கொண்டுள்ளது. அதிபர் டிரம்பின் வருகை ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

அதிபர் டிரம்ப் எனக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் நண்பர். களைப்பு இல்லாமல் இந்தியர்களை சந்திக்க வந்துள்ளார்.  அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் அவரது குடும்பத்தினரும் சபர்மதி ஆசிரமத்தில் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தி உள்ளனர். அமெரிக்காவின் ஹூஸ்டனில் நடைபெற்ற ஹவ் டி மோடி நிகழ்ச்சியில் இருந்து அதிபர் டிரம்ப் உடனான எனது பயணம் தொடங்கியது. இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு மற்ற நாடுகளுக்கு இடையிலான உறவு போன்றதல்ல. இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு இன்று புதிய உயரத்தை எட்டியுள்ளது. இருநாடுகள் இடையேயான உறவு நீண்ட காலம் நீடிக்க வேண்டும். இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தை எடுத்து காட்டுவதாக அகமதாபாத் உள்ளது. நாட்டின் சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய இடம் அகமதாபாத். சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் புதிய வரலாறு படைக்கப்படுகிறது. அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை இன்று இந்தியாவின் ஒற்றுமையின் சிலையைச் சந்திக்கிறது. இந்திய - அமெரிக்கா உறவில் அதிபர் டிரம்ப்பின் வருகை ஒரு மைல் கல் ஆகும். மெலானியா டிரம்ப் இந்தியாவுக்கு வந்திருப்பது பெருமை தரும் அம்சமாகும்.குழந்தைகள் நல்வாழ்வுக்காக மெலானியா டிரம்ப் ஆற்றுயுள்ள சேவை மகத்தானது.  இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். 

முன்னதாக மனைவி மெலானியா டிரம்புடன் இந்தியா வந்தடைந்த அமெரிக்க அதிபர் டிரம்பை அகமதாபாத் விமான நிலையத்தில் பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார். அதன் பின்னர் அதிபர் டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியுடன் இணைந்து சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்த அமெரிக்க அதிபர், இரு புறமும் அரங்கேறிய பாரம்பரிய நடனங்களை பார்வையிட்டார். பின்னர் அங்கு தயாராக நின்றிருந்த பீஸ்ட் காரில் ஏறி அமெரிக்க அதிபரும், அவரது மனைவியும் சபர்மதி ஆசிரமம் நோக்கி புறப்பட்டனர். செல்லும் வழி எங்கும் அவர்களுக்கு ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரியத்தை விளக்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகள் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது. சபர்மதி ஆசிரமத்தை வந்தடைந்த டிரம்ப் தம்பதிக்கு, அவர்களுக்கு முன்னதாகவே அங்கு வந்திருந்த பிரதமர் மோடி கைத்தறி துண்டு அணிவித்து வரவேற்றார். தொடர்ந்து ஆசிரமத்திலுள்ள நூல் நூற்கும் ராட்டை குறித்து பிரதமர் மோடி, டிரம்ப் தம்பதியினருக்கு விளக்கி கூறினார். அவரை தொடர்ந்து ஆசிரம நிர்வாகிகள் ராட்டையை இயக்குவது குறித்து எடுத்துக் கூற, அமெரிக்க அதிபர் மனைவி மெலானியாவுடன் இணைந்து ராட்டையை இயக்கினார். சபர்மதி ஆசிரம நிகழ்வுகளை முடித்துக் கொண்டு, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மொடேராவுக்கு அமெரிக்க அதிபரும், அவரது மனைவியும் புறப்பட்டு சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து