முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோமாலியாவில் : அமெரிக்கா நடத்திய விமானத் தாக்குதலில் தீவிரவாதி பலி

புதன்கிழமை, 26 பெப்ரவரி 2020      உலகம்
Image Unavailable

மொகடிசு : சோமாலியாவில் அமெரிக்கா நடத்திய விமானத் தாக்குதலில் முக்கியத் தீவிரவாதி கொல்லப்பட்டான்.

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவைத் தளமாகக் கொண்டு அல் ஷபாப் என்ற தீவிரவாத இயக்கம் இயங்கி வருகிறது. கொடூரத் தாக்குதலுக்கும், கொலைகளுக்கும் பெயர்போன இந்த அமைப்பு அல் கொய்தா அமைப்பின் கிளை அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது. சோமாலிய ராணுவத்துடன் இணைந்து அமெரிக்காவும் அவ்வப்போது அல் ஷபாப் தீவிரவாதிகளை வேட்டையாடி வருகிறது.

இந்நிலையில் கென்ய எல்லைப்பகுதியில் உள்ள சாகோவ் என்ற இடத்தில் அல் ஷபாப் இயக்கத்தின் முக்கியத் தலைவன் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து அமெரிக்க விமானங்கள் சென்று குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதில் அந்தத் தலைவனும், அவனுடன் இருந்த மற்றொருவனும் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆனால் குறிப்பிட்ட தீவிரவாதி பற்றிய தகவலை அமெரிக்கா வெளியிடவில்லை. சோமாலியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ஹார்முட்டின் உள்ளூர் மேலாளரான மொஹமத் ஹாஜி சிராத்(55) திங்களன்று பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நகரமான ஜிலிப்பின் புறநகரில் உள்ள தனது பண்ணையில் அமெரிக்க ஏவுகணைகள் தாக்குதலில் தீவிரவாதி கொல்லப்பட்டார் என்று சோமாலிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து