முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. ஆட்சியின் சிறப்புகளை மற்ற கட்சியினர் பேசி வருவது பெருமையளிக்கிறது - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

புதன்கிழமை, 26 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

தஞ்சாவூர் : அ.தி.மு.க. ஆட்சியின் சிறப்புகளை நாம் சொல்வதை விட மற்ற கட்சியினர் சொல்லி வருவது பெருமை அளிக்கிறது என்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கூறினார்.

தஞ்சாவூரில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர். வைத்திலிங்கம் மகன் டாக்டர் வை. ஆனந்தபிரபு - ஞான ரூபிணி ஆகியோருக்கு திருமணம் சிறப்பாக நடந்தது. இந்த திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:-

ஜெயலலிதாவின் ஆசியோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அம்மாவின் ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது. தஞ்சை தரணி புண்ணிய பூமி. தமிழகத்தின் உணவு தேவவையை நிறைவேற்றுவதில் டெல்டா மாவட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த 2007-ல் மாநிலத்தில் தி.மு.க. ஆட்சியும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும் நடந்த போது காவிரி நீர் பங்கீட்டில் உள்ள பிரச்சனைகளை சரி செய்ய ஜெயலலிதா எவ்வளவோ வலியுறுத்தினார். ஆனால் தி.மு.க.வும், காங்கிரசும் அதனை கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். 7 ஆண்டுகளாக நடந்த விசாரணையின் முடிவில் காவிரி நீர் பங்கீடு தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தது. 33 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் என்னுடைய மிகப்பெரிய சாதனையாக காவிரி நடுவர் இறுதி தீர்ப்பு அரசாணை பெற்று தந்ததே என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதனால் தான் காவிரி தாய் என்று ஜெயலலிதா அழைக்கப்படுகிறார். விவசாயிகளுக்கும், மக்களுக்கும் பல்வேறு நல்ல திட்டங்களை ஜெயலலிதா ஆசியோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி வருகிறார். ஹைட்ரோகார்பன் திட்டம் வருகிறதாமே என விவசாயிகள் அச்சப்பட்டனர். அவர்களின் அச்சத்தை போக்கி வாழ்க்கையில் ஒளி தீபம் ஏற்றும் வகையில் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றினார். அ.தி.மு.க. ஆட்சியின் சிறப்புகளை நாம் சொல்வதை விட மற்ற கட்சியினர் சொல்லி வருவது பெருமை அளிக்கிறது. அடுத்தவர்களிடம் கை ஏந்தாதவர்கள் விவசாயிகள் மட்டுமே. சொந்த காலில் நிற்கும் விவசாயிகளை மு.க.ஸ்டாலினால் எதிர்த்து போராடி வெல்ல முடியாது. இவ்வாறு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து