முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை: அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு

வியாழக்கிழமை, 27 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

ஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்  தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள ராதா கிருஷ்ணன் விளையாட்டு மையதானத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகளை அமைச்சர் செங்கோட்டையன் தொடக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,

ஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை.  புகார் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வில் முறைகேடு நடைபெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் சேலம் மாவட்டத்தில் கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டதாக கூறப்படுவதையும் அமைச்சர் திட்டவட்டமாக மறுத்தார்.

தமிழகத்தில் 10,11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த விவரங்களை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கினார். தேர்வு நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 27-ல் தொடங்கி ஏப்ரல் 13-ல் நிறைவு பெறும். மே 4-ம் தேதி முடிவுகள் வெளியிடப்படும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 9.45 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். பிளஸ்1 பொதுத்தேர்வு மார்ச் 4-ல் தொடங்கி மார்ச் 26-ல் நிறைவு பெறும். மே 14-ம் தேதி முடிவுகள் வெளியிடப்படும். 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8.26 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். பிளஸ்2 பொதுத்தேர்வு மார்ச் 2-ல் தொடங்கி மார்ச் 24-ல் நிறைவு பெறுகிறது. ஏப்ரல் 24-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8.16 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து