முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா: தென்கொரியாவில் 2000 நோயாளிகளுக்கு சிகிச்சை

வெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2020      உலகம்
Image Unavailable

சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தென்கொரியாவில் மட்டும் 2000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், சீனா மட்டுமின்றி பிற நாடுகளுக்கும் பரவி, மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் நேற்று முன்தினம் மேலும் 44 பேர் கொரோனா வைரசுக்கு பலியானதையடுத்து அங்கு உயிரிழப்பு 2788 ஆக உயர்ந்துள்ளது. 78 ஆயிரத்து 824 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர். நேற்று முன்தினம் புதிதாக 327 பேர் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். தீவிர நோய்த் தடுப்பு நடவடிக்கைகளால் சீனாவில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் இறப்பு விகிதம் கணிசமாக குறையத் தொடங்கி உள்ளது. ஆனால், சீனாவுக்கு வெளியே மற்ற நாடுகளில் இந்த வைரஸ் வேகமாகப் பரவி வருவது கவலை அளிப்பதாக உள்ளது. ஈரானில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். 245 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தென் கொரியாவில் இந்த வைரசுக்கு 13 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் மட்டும் 256 புதிய நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர், கொரோனா தாக்கம் அதிகம் உள்ள டீகு நகரம் மற்றும் வடக்கு ஜியாங்சாங் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். இதன்மூலம், தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கை 2022 ஆக உயர்ந்துள்ளது. சீனாவுக்கு வெளியே அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை இங்குதான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து