முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் இன்று துவக்கம் - ஆர்ஜித சேவைகள் ரத்து

புதன்கிழமை, 4 மார்ச் 2020      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி : திருமலையில் இன்று வியாழக்கிழமை வருடாந்திர தெப்போற்சவம் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

திருமலையில் உள்ள ஸ்ரீவாரி திருக்குளத்தில் ஆண்டுதோறும் மாசி மாத பவுர்ணமியையொட்டி வருடாந்திர தெப்போற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது.அதன்படி இன்று முதல் 9-ம் தேதி வரை திருமலையில் வருடாந்திர தெப்போற்சவம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு 5, 6-ம் தேதிகளில் வசந்தோற்சவம், சகஸ்ர தீபாலங்கார சேவை, மார்ச்.7, 8, 9-ம் தேதிகளில் ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், சகஸ்ர தீபாலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.மேலும் 9-ம் தேதி பவுர்ணமி அன்று நடைபெறும் கருட சேவையும் ரத்து செய்துள்ளது. இன்று முதல் நாள் சீதா லட்சுமண ஆஞ்சநேய சமேத ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி உற்சவ மூர்த்திகள் தெப்பத்தில் உலா வருகிறார். 6-ம் தேதி ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணசுவாமி தெப்பல் உற்சவம் நடக்கிறது.7, 8, 9-ம் தேதிகளில் மலையப்பசாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் தெப்பத்தில் பவனி வருகிறார். திருப்பதி தேவஸ்தானத்திடம் உள்ள பயன்படுத்தப்படாத துணிகளின் 343 லாட்டுகள், வரும் 9-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை இணையதளம் மூலம் ஏலம் விடப்பட உள்ளது. இதில் பட்டுத் துணிகள், ஆர்ட் பட்டு, பாலியஸ்டர், வேட்டிகள், மேல் துண்டு, டர்க்கி துண்டுகள், சார்வைகள், ஆயத்த ஆடைகள், போர்வைகள், பஞ்சாபி துணி வகைகள் உள்ளிட்டவை உள்ளன. இந்த ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் திருப்பதியில் உள்ள தேவஸ்தான சந்தை பொருள் விற்பனை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து