முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்கள் டி20 உலக கோப்பை: இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது இந்தியா

வியாழக்கிழமை, 5 மார்ச் 2020      விளையாட்டு
Image Unavailable

சிட்னி : இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டதால் புள்ளிகள் அடிப்படையில் இந்திய பெண்கள் அணி டி20 உலக கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் முடிவடைந்து புள்ளிகள் பட்டியலில் முன்னிலையில் உள்ள அணிகளுக்கு இடையே அரையிறுதி போட்டிகள் நடைபெற்றுவருகிறது.

அதன் படி ‘ஏ’ பிரிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்த இந்திய அணிக்கு 'பி’ பிரிவில் இரண்டாவது இடத்தை பிடித்த இங்கிலாந்து அணிக்கும் இடையே நேற்று முதல் அரையிறுதி போட்டி நடைபெறுவதாக இருந்தது. ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் நேற்று நடைபெற இருந்த அரையிறுதி போட்டி மழை குறுக்கீட்டால் டாஸ் கூட சுண்டப்படாமல் ரத்து செய்யப்பட்டது. அரையிறுதி போட்டி கைவிடப்பட்டதையடுத்து புள்ளிகள் அடிப்படையில் பட்டியலில் 'ஏ’ பிரிவில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து