முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா அச்சுறுத்தல்: 31-ம் தேதி வரை இந்திய கால்பந்து லீக் போட்டிகள் ஒத்திவைப்பு

சனிக்கிழமை, 14 மார்ச் 2020      உலகம்
Image Unavailable

புது டெல்லி : இந்தியாவில் நடைபெறவுள்ள இந்திய கால்பந்து லீக் போட்டிகள் வரும் 31-ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுகிறது என அனைத்து இந்திய கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பொது நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மக்கள் கூடும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்தியாவில் நடைபெற உள்ள கால்பந்து லீக் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, அனைத்திந்திய கால்பந்து சம்மேளனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், பல்வேறு மாநில அரசுகளின் பரிந்துரையை ஏற்று இந்தியாவில் நடைபெறவுள்ள இந்திய கால்பந்து லீக் போட்டிகள் இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுகிறது என அனைத்து இந்திய கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து