எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி - தேனி மாவட்டம், பெரியகுளத்தில் நகர்மன்றஉறுப்பினர்களுக்கான உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பொன்னுப்பிள்ளை தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் முன்னாள் எம்.பி ஆர்.பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியகுளம் நகர செயலாளர் என்.வி.ராதா வரவேற்றார். இக்கூட்டத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் நகர்மன்ற உறுப்பினர் உள்ளிட்ட உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைகளை வழங்கி சிறப்பித்தார். அவர் பேசும்போது பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி தேர்தல் விரைவில் வர இருக்கின்றது. நடந்து முடிந்த ஊராட்சி மற்றும் ஒன்றியங்களுக்கான தேர்தலில் நாம் சிறப்பாக செயல்பட்டு பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். பெரியகுளம் நகராட்சி பகுதியானது எப்பொழுதும் கழகத்தின் கோட்டையாக திகழ்ந்து வந்திருக்கின்றது. நமது இயக்கம் உருவான காலத்திலிருந்து இயக்கத்திற்காக, கழக வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட நமது கழக முன்னோடிகளுக்கு நன்றி கடன்பட்டவர்களாக நாம் இருக்கின்றோம். புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவி அம்மா அவர்களும் எந்த நோக்கத்திற்காக இந்த இயக்கத்தை உருவாக்கினார்களோ அந்த நோக்கம் நிறைவேறியிருக்கிறது. மக்களால் நான், மக்களுக்காவே நான் என்று எண்ணற்ற மக்கள் திட்டங்களை செயல்படுத்திய புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு பரிசாக 32 ஆண்டுகளுக்கு பின் ஆண்ட கட்சிக்கு தொடர்ந்து மீண்டும் ஆளும் உரிமையை தமிழக மக்கள் கொடுத்தனர். நமது கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் என்று கழகத்தின் உயர்ந்த நிலையை அடைய அடிப்படை ஆதாரமாக விளங்குவது பெரியகுளம் நகர் தான் என்பதை நினைத்து நான் என்றும் பெருமை கொள்வேன். 1996ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் உள்ள நகராட்சிகளில் 8 நகராட்சிகளில் மட்டுமே கழகம் வெற்றி பெற்றது. அதில் நகர்மன்ற தலைவராக என்னை பெரியகுளம் நகர மக்கள் வெற்றி பெற செய்தனர். அதனை தொடர்ந்து 2001ல் பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் பொறுப்பேற்றேன். பின்னர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டபோது என் மீது நம்பிக்கை வைத்து புரட்சித்தலைவி அம்மா அவர்கள் என்னை முதல்வராக்கினார். பெரியகுளம் தொகுதியில் 2 முறையும், போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் இருமுறையும் வெற்றி பெற்றுள்ளேன். இதற்கெல்லாம் அடிப்படை காரணம் பெரியகுளம் நகர் கழகத்தினர் மற்றும் பொதுமக்களே ஆகும். வரும் உள்ளாட்சி தேர்தலில் பெரியகுளம் நகரில் உள்ள 30 வார்டுகளிலும் நமது கழகம் சார்பில் போட்டியிட ஒவ்வொரு வார்டுக்கும் பலர் விருப்ப மனு கொடுத்திருக்கின்றீர்கள். அனைவரும் போட்டியிட தகுதி உள்ளவர்களாக இருந்தபோதிலும் அவர்களில் ஒரு வார்டுக்கு ஒருவருக்கு தான் கழகம் சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும். அப்படி வாய்ப்பு கிடைப்பவருக்கு அந்தந்த வார்டு கழக பொறுப்பாளர்கள், தொண்டர்கள் தங்களது கருத்துவேறுபாடுகளை மறந்து அவருக்கு உறுதுணையாக இருந்து பொதுமக்களிடம், வாக்காளர்களிடம் சென்று புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆகியோரின் வெற்றி சின்னமாம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து அவரது வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும். கழகத்தினர் தங்களது உண்மையான விசுவாசத்தை காண்பிக்கும் நல்ல நேரம் எது என்று சொன்னால் அது தேர்தல் களம் தான். கழகத்தினர் தலைவராக, பொறுப்பாளர்களாக, தொண்டராக இருந்தாலும் நமது கழக வேட்பாளரின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பது தான் கழகத்திற்கு நாம் செய்யும் உண்மையான விசுவாசமாகும். நமது கழகம் இன்றும் உயிரோட்டமாக இருப்பதற்கும், ஆலமரமாக இருப்பதற்கும் புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவி அம்மா அவர்களும் 47 ஆண்டுகாலம் போராடி, பல சோதனைகளை கடந்து எந்த கொம்பாதி கொம்பனாலும் அசைக்க முடியாக எஃகு கோட்டையாக மாற்றி அரும்பணி ஆற்றியது தான். அதன் காரணமாக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் 10 ஆண்டு காலம் முதல்வராகவும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 17 ஆண்டுகாலம் முதல்வராகவும், தற்போது நடைபெறுகின்ற அம்மாவின் அரசை தலைமையேற்றிருக்கின்ற எடப்பாடி பழனிசாமி 3 ஆண்டுகாலம் முதல்வராகவும் என 30 ஆண்டுகாலம் நமது கழகம் மக்கள் சேவையாற்ற தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கின்றது. தமிழகத்தில் 30 ஆண்டுகாலம் ஆளும் பொறுப்பை பெற்ற ஒரே கட்சி நமது கழகம் மட்டுமே என்ற பெருமையை புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் நமக்கு பெற்று தந்திருக்கின்றனர். நமது இயக்கத்தில் சாதாரண தொண்டராக இருப்பதே பெருமை என்ற நிலையை புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் ஏற்படுத்தியிருக்கின்றனர். இவற்றையெல்லாம் நாம் மனதில் நிறுத்தி வீறு கொண்டு எழும் சிப்பாயாக நமது கழக தொண்டர்கள் செயல்பட்டு நமது கழகத்தின் சிறப்பான வெற்றியை உறுதி செய்திட உழைத்திட வேண்டும் என்றார். மேலும் ஒவ்வொரு வார்டுக்கும் கழகத்தின் சார்பில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்கள் தங்களது வெற்றி வாய்ப்பு குறித்து தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்று சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சோலைராஜ், மாவட்ட இணை செயலாளர் மஞ்சுளாமுருகன், மாவட்ட துணை செயலாளர்கள் முறுக்கோடை ராமர், வசந்தாநாகராஜ், பெரியகுளம் ஒன்றிய செயலாளர்கள் செல்லமுத்து, அன்னபிரகாஷ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அபுதாஹீர், மாவட்ட பாசறை செயலாளர் நாராயணன், நகர துணை செயலாளர் அப்துல்சமது, மாவட்ட பிரதிநிதிகள் அன்பு, அன்புசெல்வன், விவசாய பிரிவு கண்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் கள்ளிப்பட்டி சிவக்குமார், கீழவடகரை ஊராட்சி மன்ற துணைதலைவர் ராஜசேகர், நகர மகளிர் அணி நிர்வாகிகள் சரஸ்வதி, இந்திரா மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி: உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய தமிழக வீரர் குகேஷ்
22 Apr 2024ஒட்டோவா : கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார்.
-
விராட் கோலிக்கு அபராதம்
22 Apr 2024ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
-
நடிகர் ரஜினி பட தலைப்பு அறிவிப்பு
22 Apr 2024சென்னை : ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது குஜராத்
22 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.
-
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
22 Apr 2024புதுடில்லி : பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
-
பெங்களூரு, பஞ்சாப் அணி கேப்டன்களுக்கு அபராதம் : ஐ.பி.எல். நிர்வாகம் நடவடிக்கை
22 Apr 2024மும்பை : பெங்களூரு அணி கேப்டன் டு பிளெஸ்சிஸ், பஞ்சாப் அணி கேப்டன் சாம் கர்ரனுக்கு அபராதம் விதித்துள்ளது ஐ.பி.எல். நிர்வாகம்.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.