முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரம்ம குமாரிகள் இயக்க தலைமை நிர்வாகி மறைவுக்கு முதல்வர் இரங்கல்

வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் தலைமை நிர்வாகி ராஜயோகினி தாதி ஜானகி 27.3.2020 (நேற்று) அன்று அதிகாலை  முக்தி அடைந்தார் என்ற செய்தியை அறிந்து நான் வேதனை அடைந்தேன்.  ராஜயோகினி தாதி ஜானகி,  2007-ம் ஆண்டிலிருந்து உலகளவிலான பிரம்ம குமாரிகள் இயக்கத்தை வழி நடத்தி வந்தவர்.

இவர் உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு, சாதி சமய இன வேறுபாடின்றி, தியானத்தின் மூலம் அமைதி மற்றும் நற்பண்புகளுடன் வாழும் ஆன்மீக வழியைப் புகட்டியவர். மக்களிடையே ஆக்கபூர்வமான மாற்றங்களைக் கொண்டு வர உழைத்தவர். பெண்களை சக்தி வாய்ந்தவர்களாக ஆக்குவதில், இவருடைய உழைப்பும், முயற்சியும் குறிப்பிடத்தக்கது.

ராஜயோகினி தாதி ஜானகியின் பிரம்ம குமாரிகள் இயக்கத்தைச் சேர்ந்த சகோதரிகள் மற்றும் பிரம்ம குமாரிகள் இயக்கத்தை பின்பற்றும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து