முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா அச்சுறுத்தல்: ஏப். 14 வரை உள்நாட்டு விமான போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகள் தொடரும்

வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

புது டெல்லி : கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு ஏப்ரல் 14-ம் தேதி வரை தொடரும் என விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் முடக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.  இந்நிலையில், அனைத்து உள்நாட்டு விமான போக்குவரத்துக்கும் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி வரை கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, அந்த இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு ஏப்ரல் 14-ம் தேதி வரை தொடரும் என தெரிவித்துள்ளது .ஏற்கனவே, கொரோனா பரவுவதை தொடர்ந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமான சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து