முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த ஒலிம்பிக்கில் தகுதி பெற்றவர்கள் 2021 போட்டியிலும் நேரடியாக பங்கேற்கலாம் : சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவு

சனிக்கிழமை, 28 மார்ச் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லாசானே : 2020 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றவர்கள் 2021 போட்டியிலும் நேரடியாக பங்கேற்கலாம் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு சர்வதேச போட்டிகள் ரத்து செய்யப்பட்டும், தள்ளி வைக்கப்படுவதுமாக இருக்கிறது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது.

கடைசியாக 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்டு 9-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக ஒலிம்பிக் போட்டி ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு இந்த போட்டி நடைபெறும்.

இந்த நிலையில் 2020 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றவர்கள் 2021 போட்டியிலும் நேரடியாக பங்கேற்கலாம் என்று ஐ.ஓ.சி. ( சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி) முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் ஒலிம்பிக் போட்டியில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொள்வதாக இருந்தனர்.

இதில் 57 சதவீதம் பேர் ஏற்கனவே போட்டியில் பங்கேற்பதற்கான தகுதியை பெற்றிருந்தனர். 32 சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் ஐ.ஓ.சி. வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்திய ஆலோசனையில் ஏற்கனவே தகுதி பெற்றவர்கள் 2021 போட்டியிலும் நேரடியாக பங்கேற்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும் தகுதி பெறும் முறையை சீராக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவில் இருந்து 74 வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்றிருந்தனர். இதில் 38 பேர் தனிநபரை சேர்ந்தவர்கள். முப்பத்தாறு பேர் குழுவில் உள்ளவர்கள்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து