முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமரின் நிவாரணத்திற்கு ரூ .10 லட்சம் நிதி உதவி : ரஹானே

ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ரகானே, பிரதமர் நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கினார். 

கொரோனா வைரஸ் தொற்று பிடியில் இருந்து தப்பிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள நிவாரணம் வழங்கி உதவி செய்யலாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து பி.சி.சி.ஐ. 51 கோடி ரூபாய் அளித்துள்ளது. சுரேஷ் ரெய்னா 52 லட்சம் ரூபாய் தருவதாக உறுதியளித்துள்ளார். 

இந்நிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனான ரகானே 10 லட்சம் வழங்குகிறார். இதுகுறித்து ரகானே கூறுகையில், என்னுடைய சிறிய பங்களிப்பு. கடல் தண்ணீரின் ஒரு துளி போன்றது. இந்த கடினமான சூழ்நிலையில் என்னுடைய சிறந்த ஆதரவை கொடுப்பேன். வீ்ட்டில் தங்கியிருப்போம், பாதுகாப்பாக இருப்போம் எனத் தெரிவித்துள்ளார்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து