முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவர்களின் பரிந்துரைப்படி மது வழங்கும் கேரள அரசின் முடிவுக்கு இடைக்காலத் தடை

வியாழக்கிழமை, 2 ஏப்ரல் 2020      இந்தியா
Image Unavailable

மருத்துவர்களின் பரிந்துரைப்படி மது வழங்கலாம் என்ற கேரள அரசின் உத்தரவுக்கு கேரள உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவால் மது கிடைக்காத விரக்தியில் கேரளாவில் சிலர் தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து, மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு மருத்துவர் பரிந்துரையின் படி, மதுபானம் வழங்க கேரள அரசு முடிவு செய்தது. ஆனால், அரசின் இந்த அறிவிப்புக்கு மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே, அரசின் அறிவிப்புக்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், மருத்துவர் பரிந்துரையின் படி மதுபானம் வழங்க அனுமதி அளித்த அரசின் முடிவுக்கு 3 வாரங்கள் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து