முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரபிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா உறுதி

வெள்ளிக்கிழமை, 3 ஏப்ரல் 2020      இந்தியா
Image Unavailable

உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் பலருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதால் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நாடு முழுவதும் 2300 - க்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை கூறி உள்ளது. டெல்லி தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்று திரும்பிய 42 பேரும் இதில் அடங்குவர். ஏற்கனவே உ.பி.யில் 113 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 285 ஆக உயர்ந்துள்ளது. 2 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இதுவரை 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 3 பேர் பலியாகி உள்ளனர். 11 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து