முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏப்ரல் 15-க்கு பிறகு சர்வதேச விமானங்கள் இந்தியா வர அனுமதி: மத்திய அரசு

வெள்ளிக்கிழமை, 3 ஏப்ரல் 2020      இந்தியா
Image Unavailable

ஊரடங்கு முடிந்த பின்னர் வரும் 15-ம் தேதிக்கு பிறகு சர்வதேச விமானங்கள் இந்தியா வர அனுமதி அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

வரும் 15-ம் தேதிக்கு பிறகு சர்வதேச விமானங்கள் இந்தியா வர அனுமதிக்கப்படும். இருப்பினும், எந்தெந்த நாடுகளிலிருந்து விமானம் வரும் என்பது சூழலுக்கு ஏற்றபடி அனுமதி வழங்கப்படும். வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களை அழைத்து வரும் விமானங்கள், ஊரடங்கு காலம் முடியும் வரை காத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் விமான போக்குவரத்து துறை செயலர் பிரதீப் சிங் கரோலா கூறுகையில், ஊரடங்கு முடிந்த பிறகு மேற்கொள்ளும் விமான பயணங்களுக்கான முன்பதிவுகளை விமான சேவை நிறுவனங்கள் ஏற்கலாம். ஒருவேளை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் முன்பதிவு ரத்து செய்ய வேண்டியது வரும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து