முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 7-ம் தேதி முதல் வீடு தேடி வரும் 1000 ரூபாய் : தமிழக அரசு தகவல்

வெள்ளிக்கிழமை, 3 ஏப்ரல் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : வரும்  7-ம் தேதி முதல் வீடு, வீடாகச் சென்று ரூ.1000 வழங்க  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் ஊடரங்கு அமல்படுத்தப்பட்டதால் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.1,000 மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கப்படும் என முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்தாா். இந்நிலையில், ரேஷன் கடைகளில் கூட்டத்தை தவிர்க்க, வீடுகளுக்கு டோக்கன் வழங்கும் போதே 1000 ரூபாய் வழங்கப்படும் என நேற்று காலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முதல்வர் கூறியிருந்தார்.

இந்நிலையில், கூட்டத்தைத் தவிர்க்கும் பொருட்டும், சமூக இடைவெளியை பின்பற்றும் பொருட்டும் வரும் 7-ம் தேதி முதல் வீடு, வீடாகச் சென்று ரூ.1000 வழங்க  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, இல்லத்திற்கே வந்து நியாயவிலைக் கடை அதிகாரிகள் ரூ.1,000 வழங்குவார்கள் என்றும் ஏற்கெனவே டோக்கன் பெற்றவர்களுக்கு இன்று ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து