முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செஸ் மூலம் நிதானத்தை கற்றுக்கொண்டேன்: சாஹல்

திங்கட்கிழமை, 6 ஏப்ரல் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கிரிக்கெட் போட்டியின் போது நிதானத்தை கடைபிடிக்க செஸ் அறிவு கைக்கொடுக்கிறது என்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் ரிஸ்ட் சுழற்பந்து வீச்சாளர்கள் சாஹல். இக்கட்டான நிலையில் பந்து வீச அழைத்தாலும் எந்தவித தயக்கமும் இன்றி பந்து வீச தயாராக இருப்பார். கிரிக்கெட்டிற்கு முன் இவர் சிறந்த செஸ் வீரர். செஸ் போட்டியில் சாதிக்க நிதானம் தேவை. செஸ் போட்டியில் கற்றுக்கொண்டது கிரிக்கெட் போட்டியின்போது பயன்படுகிறது என சாஹல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சாஹல் கூறுகையில், டெஸ்ட் போட்டிகளில் ஒரு நாள் முழுவதும் (பந்து வீச்சாளர்கள்) நீங்கள் நன்றாக பந்து வீசினாலும் கூட சில நேரங்களில் விக்கெட் வீழ்த்த முடியாமல் போகலாம். ஆனால், அடுத்த நாளும் பந்து வீச வரவேண்டும். ஆகவே நிதானம் மிகவும் அவசியம். செஸ் இந்த விஷயத்தில் எனக்கு அதிக அளவில் கற்றுக் கொடுத்துள்ளது. நிதானத்தை கடைபிடித்து பேட்ஸ்மேன்களை அவுட்டாக்குவதை கற்றுள்ளேன் என்றார்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து