முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்கொரியாவில் குணம் அடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 12 ஏப்ரல் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

தென்கொரியா : தென்கொரியாவில் குணம் அடைந்தவர்களில் 91 பேருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தென்கொரியாவில் சில மாதங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் வேகமாக பரவியது.அதன்பின் அந்த நாடு தீவிர நடவடிக்கைகளை எடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தியது. தற்போது அங்கு கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது.தென்கொரியாவில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில் குணம் அடைந்தவர்களில் 91 பேருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தென்கொரியா சுகாதாரத்துறை அதிகாரி கூறியபோது, குணம் அடைந்தவர்கள் மீண்டும் பாதிப்புக்குள்ளானது குறித்து விசாரணை இன்னும் தொடங்கப்படவில்லை.

விரைவில் இதுபற்றி தெளிவான தகவல்கள் வழங்கப்படும்.கொரோனாவில் இருந்து விடுபட்டவர்கள் முழுமையாக குணம் அடையாமல் மீண்டும் வைரஸ் செயல்பட்டு இருக்கலாம்.வைரஸ்களின் எச்சம் நோயாளிகளின் உடம்பில் இருக்கக் கூடும்.அதன் காரணமாகவே இதுபோன்ற விளைவுகள் ஏற்படலாம் என்றார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து