முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கன் அதிபர் மாளிகையில் 20 பேருக்கு கொரோனா

ஞாயிற்றுக்கிழமை, 12 ஏப்ரல் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

காபூல் : ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகையில் வேலை செய்யும் 20 பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. 

ஆப்கானிஸ்தானில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அங்கு இதுவரை 18 பேர் பலியாகி இருக்கிறார்கள். 555 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகையில் வேலை செய்யும் 20 பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து ஆப்கானிஸ்தானில் ஊடகங்கள் சார்பில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகையில் பணியாற்றும் 20 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது” என்று கூறியுள்ளது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப்கானுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதா? அல்லது அவர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளாரா? என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து