முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லாக் டவுன் நாட்களை இனி மேலும் தாங்க முடியாது : சுழற்பந்து வீச்சாளர் சாஹல்

ஞாயிற்றுக்கிழமை, 12 ஏப்ரல் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : லாக் டவுன் நாட்களை இனிமேலும் தாங்க முடியாது என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹல் தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் 14 - ந்தேதியுடன் 21 நாட்கள் முடிவடைகிறது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வரவில்லை என்பதால் மேலும் இரண்டு வாரங்கள் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை திரும்ப பெற்றபின் மூன்று வருடங்கள் வெளியே தங்க முடியும் என்று சுழற்பந்து வீச்சாளர் சாஹல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து சுழற்பந்து வீச்சாளர் சாஹல் கூறுகையில், லாக்டவுன் முடிந்து நான் விட்டை விட்டு வெளியே சென்றபின், என்னுடைய விட்டுக்கு திரும்பமாட்டேன். இனிமேல் என்னால் வீட்டுக்குள் இதுபோன்று நீண்ட நாட்கள் இருக்க முடியாது. தற்போது வீட்டிற்குள் இருந்த நாட்கள் மூன்று வருடத்திற்கு இணையானது. பக்கத்தில் உள்ள ஓட்டலில் வசிக்க முடியும். ஆனால் வீட்டில் தங்க முடியாது. இதுதான் தற்போது என்னுடைய நிலை. லாக்டவுன் நாட்களை இனிமேலும் தாங்க முடியாது என்றார்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து