முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளத்தில் ஏப்ரல் 27 - ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது

செவ்வாய்க்கிழமை, 14 ஏப்ரல் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

காத்மாண்டு : கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நேபாளத்தில் வரும் 27- ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று நேபாளம். இமயமலை அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய நாடான நேபாளத்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் காணப்படுகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், கடந்த மார்ச் 24 ஆம் தேதி நேபாளத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

இந்த ஊரடங்கு இன்றுடன் முடிவுக்கு வர இருந்த நிலையில், வரும் 27 - ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக நேபாள அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கு கால கட்டத்தின் போது, அத்தியாவசிய தேவைகளைத் தவிர அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்படும் எனவும், உள்நாட்டு,வெளிநாட்டு விமானப்போக்குவரத்து நிறுத்தப்படும் என்றும் நேபாள அரசு அறிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து