முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருந்து மாத்திரைகளை அள்ளிதந்து இந்தியா செய்த உதவிக்கு ஐ.நா. பொதுச்செயலர் நன்றி

சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2020      உலகம்
Image Unavailable

 கொரோனாவுக்கு எதிரான போரில் உதவ உலக நாடுகளுக்கு மாத்திரைகளை அனுப்பிவைத்த இந்தியாவுக்கு ஐ.நா.பொதுச்செயலர் அன்டானியோ குட்டரஸ் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

 அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கும், ஆப்கானிஸ்தான், நேபாளம், பூட்டான்,வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் மாத்திரைகளை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

இது குறித்து ஐ.நா. பொதுச்செயலர் அன்டானியோ குட்டரசின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கூறிய அவர்,

 கொரோனா போரில் ஒவ்வொரு நாடும் பிறநாடுகளுக்கு உதவ வேண்டும் என நான் கேட்டுக்கொண்டேன். அவ்வாறு உதவிய இந்தியா போன்ற நாடுகளுக்கு நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து