முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தாக்கம் : இலங்கை பாராளுமன்ற தேர்தல் ஒத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை, 21 ஏப்ரல் 2020      உலகம்
Image Unavailable

கொரோனா தாக்கத்தால் இலங்கையில் வரும் 25-ம் தேதி நடைபெற இருந்த பாராளுமன்ற தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அங்கு கடந்த மாதமே ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று முன்தினம் முதல் ஊடரங்கில் தளர்வு செய்யப்படும் என்று அரசு அறிவித்து இருந்த நிலையில் அங்கு மீண்டும் புதிதாக 41 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஊரடங்கு தளர்வு அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது.

இந்த நிலையில் இலங்கை பாராளுமன்ற தேர்தல் 2 மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வருகிற 25-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இலங்கை பாராளுமன்ற தேர்தல் ஜூன் 20-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து