முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் வந்துள்ள மத்திய குழுவுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை: அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்பு

திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2020      தமிழகம்
Image Unavailable

கொரோனா தொற்று குறித்த தமிழக நிலை குறித்து ஆய்வு செய்ய வந்துள்ள மத்திய குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

இந்தக்கூட்டத்தில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழகம் கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் முதல் ஐந்து இடங்களுக்குள் உள்ளது. தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 26 மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட் மாவட்டங்களாக உள்ளன. சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் 3 இலக்க எண்ணை அடைந்து விட்டன. திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களும் பின்னாலேயே உள்ளன. இதில் சென்னை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. சென்னையின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவின் பல மாநிலங்களின் மொத்த எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. சென்னையில் பல மண்டலங்களில் அதிக அளவில் நோய்த்தொற்று உள்ளது. இந்நிலையில் இது குறித்து ஆராய ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு சென்னை வந்துள்ளது.

இந்தக் குழு சென்னையில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்தது. சென்னையில் பல்வேறு இடங்களுக்கு இக்குழு சென்றது. கோயம்பேடு மார்க்கெட், தொற்று அதிகம் உள்ள மண்டலங்களில் உள்ள பகுதிகள், மருத்துவமனைகளில் குழு ஆய்வு செய்தது. வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கியுள்ள காப்பகங்களிலும் ஆய்வு நடத்தியது. சென்னை மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர் ஆகியோர் அடங்கிய குழுவினருடனும் ஆலோசனை நடத்தியது. பின்னர் அந்தக்குழு நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பி.எஸ், அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், சி. விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் சண்முகம், பேரிடர் துறை செயலர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ், டி.ஜி.பி. திரிபாதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கொரோனா பாதிப்பு நேரடி கள ஆய்வில் திரட்டப்பட்ட தகவல் அடிப்படையில் முதல்வருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்துக்கு முன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். மேற்கண்ட கூட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கையுடன் மத்திய அரசிடமிருந்து தமிழகத்தின் கோரிக்கைகள், நிதித் தேவை என்ன என்பது குறித்தும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசின் உதவி குறித்தும் கோரிக்கை வைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து