முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோயம்பேடு மார்க்கெட்டில் மேலும் ஒரு வியாபாரிக்கு கொரோனா

செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை கோயம்பேட்டில் உள்ள மார்க்கெட்டில் மேலும் ஒரு வியாபாரிக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 2 வியாபாரிகளுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து, மார்க்கெட்டை இரண்டாகப் பிரித்து சமூக இடைவெளியை உறுதி செய்ய முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று முன்தினம் வரை வியாபாரம் செய்த பூக்கடை வியாபாரிக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வியாபாரிகள் சங்க நிர்வாகிகளிடம் காவல்துறை மற்றும் சி.எம்.டி.ஏ.அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மொத்த வியாபார கடைகளை மட்டும் கோயம்பேடு சந்தையில் செயல்படவும், சிறு வியாபாரிகளுக்கு வேறு இடங்களில் வியாபாரம் செய்யவும் சி.எம்.டி.ஏ. அனுமதி அளித்தது. இதனை ஏற்க சிறு வியாபாரிகள் மறுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து