எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா நோயின் வலிமையை அறிந்து மக்கள் அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும் மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் தான் கொரோனாவை தடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக அமைக்கப்பட்டுள்ள 40 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட 12 சிறப்பு குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். கொரோனா எதிரொலியாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் தீவிரமடைந்து உள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமுடன் ஈடுபட்டு வருகிறது.
சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சி பகுதிகளில் 26-ம் தேதி முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் முழு ஊரடங்கு இன்று இரவு 9 மணி வரை அமலில் உள்ளது. சேலம், திருப்பூர் மாநகராட்சிகளிலும் 26-ம் தேதி துவங்கிய முழு ஊரடங்கு நேற்று இரவு 9 மணியுடன் முடிவடைந்தது. இது போன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகிறது. கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை, நிவாரண பணிகள் என பல்வேறு பணிகளை மேற்கொள்ள 12 சிறப்பு குழுக்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அமைத்திருந்தார். இந்த குழுக்களில் மொத்தம் 40 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இதுதவிர தலைமைச் செயலாளர் தலைமையில் தனி சிறப்பு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள 12 குழுக்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம், காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது, மே 3-ம் தேதிக்கு பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடனான இந்த ஆலோசனை கூட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
12 குழுக்கள் அமைக்கப்பட்டு இந்த குழுவினர் பல்வேறு பணிகளை சிறப்பாக செய்து வருகிறார்கள். ஒவ்வொரு குழுவினரும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே ஒதுக்கப்பட்ட பணிகளில் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது? மேலும் என்னென்ன பணிகளை செய்ய வேண்டும் என நீங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். அரசு செய்ய வேண்டிய பணிகள் என்ன? மக்கள் பிரச்சினைகளை தீர்க்க ஆலோசனைகளை சொல்லுங்கள். துறை வாரியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். காய்கறி சந்தைகளில் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை. எவ்வளவு தூரம் எடுத்து சொன்னாலும் மக்கள் அதனை பின்பற்றுவதில்லை. எவ்வளவு தான் எடுத்து சொன்னாலும் கொரோனாவின் வீரியம் தெரியாமல் மக்கள் விளையாட்டுதனமாக இருக்கிறார்கள். அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் கொரோனா தாக்கி கொத்து கொத்தாக பலியானதை டி.வி.யில் பார்க்கிறார்கள். அப்படி இருந்தும் அதனை உணரவில்லை. அரசு சொல்லும் வழிமுறைகளை பின்பற்றுவதில்லை. இப்போது இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. எனவே அங்கெல்லாம் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது. நமக்கு ஆரம்ப கட்டம் தான் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மக்கள் ஒத்துழைப்பு அளித்தால்தான் கொரோனாவை தடுக்க முடியும். இல்லாவிட்டால் தடுக்க முடியாது. வெளிநாட்டில் கொரோனா வீரியத்தை முதலில் அவர்கள் உணர மறுத்தார்கள். எனவே தான் அங்கு பலி எண்ணிக்கை அதிகமானது. அதன்பின் தான் இதனை உணர்ந்தார்கள். எனவே இதனை எல்லாம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். போலீசாருக்கு இது கடுமையான பணி. சவாலான பணி. இரவு பகல் பாராமல் அவர்கள் பணியாற்றி வருகிறார்கள். காவல்துறையினரும், உள்ளாட்சி துறையினரும் ஒலிபெருக்கி மூலம் மக்களிடம் வீதிவீதியாக சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும். சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். இதனை எல்லாம் கடைப்பிடிக்காததால் தான் கொரோனா தாக்குதல் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனை எல்லாம் மக்களிடம் உணர்த்த வேண்டும். இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் முன்பு எப்படி இருந்தது. தற்போது எப்படி உள்ளது என்பதை எல்லாம் மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். ஆகவே நோயின் வலிமையை அறிந்து மக்கள் அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதன் பின் ஒவ்வொரு பணிக்குழு சார்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. நேற்று இந்த ஆலோசனை கூட்டத்துக்குப்பின், இன்று மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். இதன் பின் மே 3-ம் தேதிக்குப் பின் ஊரடங்கை நீடிப்பதா? தளர்த்துவதா என்பது பற்றி முதல்வர் முடிவு எடுத்து அறிவிப்பார் என தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 5 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...