முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்தது: சுகாதாரத்துறை அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2020      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் மேலும் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,058 -ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 121 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 1,128 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 27 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 25-ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் 30,692 பேர் இதுவரை வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். 47 பேர் அரசு கண்காணிப்பில் உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 93,189 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 41 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 902 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் 54.84 சதவீதம்  பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் மக்கள்தொகை அதிகம் என்பதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது. தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு இதுவரை மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. செங்கல்பட்டில் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்களில் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 80 ஆண்கள், 41 பெண்களுக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து