முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் எடப்பாடி தலைமையில் 2-ம் தேதி அமைச்சரவை கூட்டம்

புதன்கிழமை, 29 ஏப்ரல் 2020      தமிழகம்
Image Unavailable

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மே 2 - ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது ஊரடங்கு நிலவரம் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 38 நாட்கள் ஆகியுள்ள போதிலும் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வந்தபாடில்லை. நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா? அல்லது சில தளர்வுகள் இருக்குமா? என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மே 2 - ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் ஊரடங்கு தொடர்பாக ஆலோசனை நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. ஏற்கனவே நிபுணர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊரடங்கு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து