முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிரடியாக பேட்டிங் செய்யும் நாளை எதிர்பார்க்கிறேன் - ரோகித் சர்மா

சனிக்கிழமை, 2 மே 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : அதிரடியாக பேட்டிங் செய்யும் நாளை எதிர்பார்க்கிறேன் என்று இந்திய அணியின் துவக்க ஆட்டகாரர் ரோகித் சர்மா கூறியுள்ளார். 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. லாக் டவுனில் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் இல்லங்களில் பயிற்சி செய்து வருகிறார்கள். 

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா கூறுகையில்,

உள் அரங்கில் கிரிக்கெட் விளையாட போதுமான இடம் இருந்தால் நன்றாக இருக்கும் என விரும்புகிறேன். ஆனால் மும்பையில் இடங்கள் எல்லாம் நெரிசலாக காணப்படுகின்றன. எனவே உங்கள் அபார்ட்மெண்டை விட்டு வெளியேற முடியாது. மும்பையில் உங்களுக்கென விளையாட்டுப் பகுதிகளை உள்ளடக்கிய சொந்த வீடு வாங்குவது அவ்வளவு எளிதல்ல. இங்கு எல்லாம் விலை அதிகம். நான் அபார்ட்மெண்டில் வசிக்கிறேன். நல்லவேளையாக அதில் பால்கனி உண்டு.

எனது பயிற்சியாளர் கூறியபடி அந்த இடத்தில் உடற்பயிற்சி செய்து வருகிறேன். உடற்பயிற்சிக்கூடங்களை விரைவில் திறப்பார்கள். அப்போது அங்குச் சென்று பயிற்சி மேற்கொள்வேன். என்னுடைய பேட்டிங் பயிற்சியை, ஆட்டத்தை மிஸ் செய்கிறேன். அதிரடியாக பேட்டிங் செய்யும் நாளை எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து