முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்கும் : அதிபர் டிரம்ப் நம்பிக்கை

திங்கட்கிழமை, 4 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கிடைத்து விடும் என்று ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். 

வாஷிங்டன் டி.சி.யில் உள்ள லிங்கன் மெமோரியலில் இருந்து ஒளிபரப்பப்பட்ட ஒரு பாக்ஸ் நியூஸ் நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பேசும் போது கூறியதாவது:- 

இந்த ஆண்டின் இறுதியில் ஒரு தடுப்பூசி கிடைத்து விடும் என்று நாங்கள் நம்புகிறோம். செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்படும். மாணவர்கள் - மாணவிகள் கல்விகற்க செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அமெரிக்க ஆராய்ச்சியாளர்களை விட வேறொரு நாடு தடுப்பூசியை கண்டுபிடித்தது என்றால் நான் அவர்களுக்கு வாழ்த்து கூறுவேன். நல்ல வகையில் தடுப்பூசி கிடைக்க வேண்டும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து