முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா முடிவுக்கு வந்ததும் உலகில் பஞ்சம் ஏற்படும் ஐ.நா. சபை எச்சரிக்கை

சனிக்கிழமை, 9 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

நியூயார்க் : கொரோனா முடிவுக்கு வந்ததும் பல நாடுகளும் பொருளாதாரத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டு, 26 கோடி மக்கள் பசி, பட்டினி நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று ஐ.நா. சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து உலக உணவு திட்டத்தின் நிர்வாக இயக்குனர் டேவிட் பீஸ்லி கூறியதாவது:-கொரோனா முடிவுக்கு வந்ததும் பல நாடுகளும் பொருளாதாரத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்படும். இந்த ஆண்டு இறுதியில் இதன் நிலைமை மோசமாகும். 26 கோடி மக்கள் பசி, பட்டினி நிலைக்குதள்ளப்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். முதலில் அதை தடுப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.

இதை சரி செய்வதற்கு பணக்கார நாடுகளும், பணக்காரரும், பண வசதி கொண்ட நிறுவனங்களும் தாராளமாக உதவ வேண்டும். வினியோக சங்கிலிஅறுந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஐ.நா.வின் மனிதாபிமான அமைப்பின் தலைவர் மார்க் லோகாக் இது பற்றி கூறியதாவது:-

கொரோனா தொற்றின் உச்சம் இன்னும் 3 முதல் 6 மாதங்களுக்கு நீடிக்கலாம். அப்போது ஏழ்மையான நாடுகளும் கடும் பாதிப்புக்கு ஆளாகும். ஏற்கனவே கொரோனாவால் மக்களுக்கு வருமானம் இல்லை.வேலை வாய்ப்பு குறைந்து விட்டது. உற்பத்தியும் இல்லை. ஏற்றுமதி வருவாய், பணம் அனுப்புதல், சுற்றுலா ஆகியவை முடங்கி விட்டன.

சுகாதார அமைப்புகளும் அழுத்தத்தில் இருக்கின்றன. இது போன்றபிரச்சினைகளால் மக்களுக்குள் மோதல் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. பசி, பஞ்சம், வறுமை, நோய் அதிகரிப்பு போன்றவை ஏற்படும். சாலை போக்குவரத்து தடைகளால் பொருளாதார மந்த நிலை இன்னும் மோசமாகும்.

இது உலக அளவில் வினியோக சங்கிலியை முறித்து விடும். பசி, பட்டினி போன்றவற்றால் மக்களிடையே மோதல் ஏற்பட்டு அது கொந்தளிப்புகளையும் உருவாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. அது கட்டுப்படுத்த முடியாத நிலைக்கும் செல்லலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து