முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குவைத்தில் இந்திய பல் டாக்டர் கொரோனா தொற்றுக்கு பலி

திங்கட்கிழமை, 11 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

குவைத் : குவைத்தில் இந்தியாவைச் சேர்ந்த பல் டாக்டர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளார். குவைத்தில் கொரோனா நோய்த்தொற்றுக்கு பலியான 2 - வது டாக்டர் இவர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 212 நாடுகளை தாக்கியுள்ளது. வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் இந்த வைரசால் 8,688 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 58 பேர் இறந்துள்ளனர்.இந்த நிலையில் குவைத்தில் இந்திய பல் டாக்டர் பலியாகி உள்ளார். 

இது பற்றிய விவரம் வருமாறு:-

இந்தியாவைச் சேர்ந்த பல் டாக்டர் வாசுதேவா ராவ் (54). இவர் கடந்த 15 ஆண்டுகளாக குவைத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு சமீபத்தில் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து வாசுதேவா ராவ் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பலியானார்.குவைத்தில் கொரோனா நோய்த்தொற்றுக்கு பலியான 2-வது டாக்டர் இவர் ஆவார். கடந்த வெள்ளிக்கிழமை எகிப்தை சேர்ந்த டாக்டர் தாரிக் உசேன் (62) என்பவரும் பலியாகி இருந்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து