முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் இருந்து கடந்த 20 ஆண்டுகளில் 5 கொள்ளை நோய்கள் பரவியுள்ளது : அமெரிக்கா குற்றச்சாட்டு

புதன்கிழமை, 13 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : சீனாவில் இருந்து கடந்த இருபதாண்டுகளில் 5 கொள்ளை நோய்கள் பரவியுள்ளதாக அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் தெரிவித்துள்ளார். 

வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் கூறியதாவது:- 

கொரோனாவால் உலக நாடுகளில் 2 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததற்கு சீனா தான் பொறுப்பேற்க வேண்டும்.சீனாவின் உகானில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது. 

கடந்த 20 ஆண்டுகளில் சார்ஸ், பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், கொரோனா உள்ளிட்ட 5 கொள்ளை நோய்கள் சீனாவில் இருந்து பரவி உள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த மருத்துவ வல்லுநர்களை அனுப்ப அமெரிக்கா முன்வந்தபோது, அதை ஏற்கச் சீனா மறுத்துவிட்டது. சீனாவில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது என்பதற்கான சான்றுகளை அமெரிக்கா தேடி வருகிறது என கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து