முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிதாக பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு இரு வெவ்வேறு தந்தைகள்: ஆய்வாளர்கள் கருத்து

வெள்ளிக்கிழமை, 15 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

பெய்ஜிங் : சீனாவில் பிறப்புகளை பதிவு செய்வதற்கான நிலையான நடைமுறையின் ஒரு பகுதியாக புதிதாகப் பிறந்த குழந்தைகளை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்துவது ஒன்று ஆகும்.  அடையாளம் வெளியிடாத  பெற்றோர்களின் இரட்டை குழந்தைகளின் டி.என்.ஏ வை பரிசோதனை செய்த போதுஅதிர்ச்சியூட்டும் ஒன்றை கண்டதாக பெய்ஜிங் ஜாங்ஜெங் தடயவியல் அடையாள மைய டி.என்.ஏ ஆய்வாளர் கூறி உள்ளார்.

தனது இரட்டை குழந்தைகளின் சோதனை முடிவுகளைப் பெற்ற போது அந்த நபர் திகைத்துப் போனார். ஏன் என்றால் இரட்டை குழந்தைகளில் ஒன்றின் டின்.என்.ஏ  மாறுபட்டு உள்ளது அது வேறு தந்தைக்கு பிறந்ததை காட்டுகிறது.  இது அவரது மனைவியும் அவரைத் தவிர வேறு ஒருவருடன் உடலுறவு கொண்டார் என்பதைக் குறிக்கிறது என்று சீன ஊடக அறிக்கை தெரிவிக்கிறது.

டி.என்.ஏ அறிக்கையை தயாரித்த ஆய்வாளர் டெங் யஜூன் கூறும் போது, இதுபோன்ற சம்பவம் நடக்க வாய்ப்புள்ளது. ஒரு கோடியில்  ஒன்றுக்கு வாய்ப்பு உள்ளது.  இரட்டை குழந்தைகளை பெற வேண்டும்  என்றால் முதலில், தாய் ஒரே மாதத்தில் ஒன்றுக்கு பதிலாக இரண்டு முட்டைகளை உற்பத்தி செய்ய வேண்டும்.

இரண்டாவதாக, இரண்டு ஆண்களுடன் உடலுறவு கொள்ள வேண்டும். முடிவுகள் குழந்தைகளுக்கு ஒரே தாய் ஆனால் ஒரே தந்தை இல்லை என்பதைக் காட்டுகிறது. அவர்களுக்கு குறைந்தது இரண்டு தந்தைகள் உள்ளனர். வெவ்வேறு தந்தையர்களுடன் பிறந்த இரட்டையர்கள் மிகவும் அரிதான நிகழ்வாகும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து