முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளத்தில் கொரோனாவுக்கு முதல் பலி: கர்ப்பிணி உயிரிழப்பு

ஞாயிற்றுக்கிழமை, 17 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

காத்மண்டு : நேபாளத்தில் கொரோனா பாதிப்புக்கு கர்ப்பிணி உயிரிழந்த நிலையில் முதல் பலி உறுதி செய்யப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.  இந்தியாவின் அண்டை நாடான நேபாளமும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பவில்லை. அந்நாட்டில், 281 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  எனினும், இதுவரை யாரும் பாதிப்புக்கு பலியாகாத நிலை இருந்து வந்தது. இந்நிலையில், அந்நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் துணை செய்தி தொடர்பு அதிகாரியான சமீர் குமார் கூறும் பொழுது, 

கடந்த 6-ம் தேதி 29 வயதுடைய கர்ப்பிணி ஒருவருக்கு குழந்தை பிறந்தது.  மறுநாள் தாய் மற்றும் சேய் இருவரும் ஆரோக்கியமுடன் வீடு திரும்பினர். ஆனால், அந்த பெண் கிராமத்தில் தனது வீட்டில் இருந்த பொழுது, காய்ச்சல் மற்றும் சுவாச பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. 

இதனை தொடர்ந்து கடந்த 14-ம் தேதி துலிகேல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் வழியிலேயே உயிரிழந்து விட்டார்.  விரிவான விசாரணை மற்றும் தொடர் பரிசோதனைகளில் இருந்து அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.  இதுவே கொரோனாவுக்கு நாட்டின் முதல் உயிரிழப்பு என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து