முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குவைத், கத்தார் நாடுகளில் முகக்கவசம் அணியாவிட்டால் ஜெயில் தண்டனை

திங்கட்கிழமை, 18 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

குவைத் : குவைத், கத்தார் நாடுகளில் வெளியே வரும் மக்கள் முகக்கவசம் அணியாவிட்டால் ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. பல்வேறு நாடுகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் குவைத், கத்தார் நாடுகளில் வெளியே வரும் மக்கள் முகக்கவசம் அணியாவிட்டால் ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குவைத்தின் சுகாதார அமைச்சர் கூறியபோது, யாராவது முகக்கவசம் அணியாமல் பிடிபட்டால் அவர்கள் 3 மாத சிறை தண்டனையை சந்திக்க நேரிடும் என்ற கூறி உள்ளார். இதேபோல் கத்தாரில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று அந்தநாட்டு டி.வி.சானல் ஒன்று தெரிவித்து உள்ளது.

அதேபோல் குவைத்தில் அபாரதமாக அந்நாட்டு பணமாக தினாருக்கு 5 ஆயிரம் விதிக்கப்படுகிறது. அதேபோல் கத்தாரில் அந்நாட்டு பணம் ரியால் 2 லட்சம் விதிக்கப்படுகிறது. கொரோனா வைரசுக்கு கத்தார் நாட்டில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். 32 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.குவைத்தில் 112 பேர் பலியாகி உள்ளனர். 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து