முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் நேற்று 536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது

திங்கட்கிழமை, 18 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் கொரோனா பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்த உத்தரவு வருகிற 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. 

இந்நிலையில், தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை நேற்று சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது.,

தமிழகத்தில் இன்று (நேற்று) ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களில், 304 பேர் ஆண்கள், 232 பேர் பெண்கள் ஆவர். இந்த நபர்களில், மராட்டியத்தில் இருந்து தமிழகம் வந்த 46 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. 

தமிழகத்தில் 7,270 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4,406 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,224ல் இருந்து 11,760 ஆக உயர்ந்து உள்ளது. சென்னையில் 364 பேருக்கு ஒரே நாளில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிப்பு 7 ஆயிரம் என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 3 பேர் கொரோனா பாதிப்புக்கு பலியான நிலையில், பலி எண்ணிக்கை 81 ஆக உயர்வடைந்து உள்ளது.

இவ்வாறு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து