முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின் கட்டணம் செலுத்த ஜூன் 6 வரை காலஅவகாசம் நீட்டிப்பு: தமிழக அரசு

திங்கட்கிழமை, 18 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : வீடுகள், சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6-ம் தேதி வரை நீ்ட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்த உத்தரவு வருகிற 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஊரடங்கின் காரணமாக வேலை, வருவாய் இல்லாத சூழலில் பலர் உள்ளனர். 

இதனால், தமிழகத்தில் சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் விவசாய கடன் ஆகியவற்றை செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனை குறிப்பிட்டு, மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலைக்கு தள்ளி வைக்க வேண்டும் எனக் கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில், தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் கோர்ட்டில் கூறுகையில்., மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதை பதிவுசெய்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை வருகிற ஜூன் 8-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து